Saturday, June 05, 2010

கோடையில் ஒரு மழைக்காலம்


தினமும்...
அந்த சூரியனின் கொடிய முகம்,
என்னை எரித்த பொழுது - கதறினேன் !
வெப்பத்தின் ஆட்டத்தை அடக்க,
நீ வரமாட்டாயா என்று ஏங்கினேன் !

உன் ஒரு துளி மேனியில் பட்டதும்,
என் உடல் சிலிர்த்தது !
உன் வரவை மேல்நோக்கி பார்த்தேன்,
என் முகம் மலர்ந்தது !

பொன்நிற மேனியை உன் சாம்பல் நிறம்,
தோய்த்த பொழுது !
என் மனம் மகிழ்ந்ததை
நீ கண்டிருப்பாய் !

எதனை நாட்கள்...
உன்னை காணமல் - பிரிந்திருந்தேன் !
எத்தனை நாட்கள்...
என்னை அணைப்பாய் - என ஏங்கியிருப்பேன் !

இன்று...
அத்தனையும் நினைவாகியது,
உன்னுள் ஆடி பாடி விளையாடுகிறேன் !

என்னை பிரியாதே...
உன்னோடு உறவாட இன்னும்,
சிறிது நேரம் எனக்கு தருவாயா ?!

கோடை மழையே...!!!

2 comments:

Lakshmi said...

very nice :)
ur simple style of writing is good

Samuel...! said...

Thanks a lot yaar!