Thursday, February 08, 2007

நடை அழகு !

பெண்ணே...
நீ அணிந்திருக்கும் சேலையினால்,
உன் நடைக்கு அழகா !?

இல்லை...
பெண்களிர்க்கே உண்டான நடையினால்,
உன் சேலைக்கு அழகா !?

உன் இடையினை மெல்ல அசைத்து,
நடையினில் பாவனை காட்டிக்கொண்டு
வருவதனை நான் தினம் ரசிக்கிறேன் !!

ஆண்களிற்கு துணையாக நீ பிறந்தாயா
அல்ல...
ஆண்களை மறைப்பதற்காக நீ பிறந்தாயா
புரியவில்லை !?

உன் நடையினால் எத்தனை ஆண்களை
மயக்கினாயோ தெரியவில்லை;
அதில் நானும் ஒருவன் என்பதனை
மட்டும் தெரிந்துகொள் !!

Friday, January 19, 2007

The Last Train




நான் உன்னிடம் விடை பெற்ற
அந்த கடைசி இரயில் பயணத்தில் ...

நீ கொடுத்த ரோஜாவை ;
கையில் வைத்து கொண்டு ,
உன் உருவம் மறையும் மட்டும்
பார்த்து கொண்டிருந்தேன் !

ரோஜாவின் நீர் துளிகளின் நடுவே
உன் கண்ணீர் துளியும் தெரிந்தது !

என் கண்ணீரையும் அதனுடன்
சேர்த்துக்கொண்டு கூறினேன் !

"உன்னை என்றும் மறவேன் ,
கண்மணியே ; விரைவில்
என்னோடு அழைத்து செல்ல !
வருவேன் காத்திரு ! "

இன்றும் அந்த ரோஜாவை
புத்தகம் நடுவே பார்க்கும் பொழுது
உன் முகம் வாடாமல்
இருப்பதை கண்டு மகிழ்கிறேன் !

இதயத்தில் எழுதிய உறவுகள்
என்றும் இறப்பதில்லை !