Wednesday, August 30, 2006

என்ன தவம் செய்தேனடி...!


கவலையில் வாடிய
அந்த பொழுதில்
ஒரு - தாயாக
ஆறுதல் தந்தாயடி !

மெளனமாக உலகில்
வாழ்ந்து கொண்டிருந்தேன்
ஒரு - சிநேகிதியாக
மகிழ் வித்தாயடி !

தொல்லைகளின் நடுவில்
சிக்கிய பொழுது
ஒரு - அன்பராக
உதவி செய்தாயடி !

இருளில் இருந்த
என் மனதை
ஒரு - சூரியனாக
விடியல் தந்தாயடி !

என்ன தவம் செய்தேனடி
உன்னை என் காதலியாக பெற !

நான் ரசிகனா...?


வானத்தை இரசித்தேன் - அதன்
மேகங்களை இரசிக்க வில்லை !

வானவில்லை இரசித்தேன் - அதன்
வண்ணங்களை இரசிக்க வில்லை !

மைனாவை இரசித்தேன் - அதன்
கருமையை இரசிக்க வில்லை !

இறுதியில் ...

உன்னை இரசித்த பொழுது - உன்
உள்ளதையும் இரசிதேனடி !

என் இரசனை மாறியது !

என் காதலே !


இத்தனை நாட்கள்
உன் அருகில் இருந்தேன் ,
உன்னை காண தோன்றவில்லை !
இன்று ,
ஆயிரம் மைல் தூரம்
தள்ளி வந்த பின் ,
உன்னை இரசிக்கின்றேன்
நிலவின் வடிவில் !

அன்று உன்னை
வர்ணிக்க என் நா எழவில்லை ;
இன்று உன் ரம்யமான அழகும் ,
குழந்தை பேச்சும் ,
அலை அலையாய்
கரையை தொட்டு செல்கிறது !

நான் உன்னிடம்
என் அன்பை கூறிய
அந்த பொழுதில் ,
உன் காதலை வருடினாய் !
இன்று நினைத்தாலும் ,
என் மனம் பறக்கிறது ,
பட்டாம் பூச்சிகளாக !

நீ என்னை நேசித்தாய் ,
நான் உன்னை சுவாசித்தேன் ...
நம் இதயங்களை
பரிமாறினாலும் ,
நம் நினைவுகள்
என்றுமே ...
நிலைத் திருகட்டும் !