அந்த கடைசி இரயில் பயணத்தில் ...
நீ கொடுத்த ரோஜாவை ;
கையில் வைத்து கொண்டு ,
உன் உருவம் மறையும் மட்டும்
பார்த்து கொண்டிருந்தேன் !
ரோஜாவின் நீர் துளிகளின் நடுவே
உன் கண்ணீர் துளியும் தெரிந்தது !
என் கண்ணீரையும் அதனுடன்
சேர்த்துக்கொண்டு கூறினேன் !
"உன்னை என்றும் மறவேன் ,
கண்மணியே ; விரைவில்
என்னோடு அழைத்து செல்ல !
வருவேன் காத்திரு ! "
இன்றும் அந்த ரோஜாவை
புத்தகம் நடுவே பார்க்கும் பொழுது
உன் முகம் வாடாமல்
இருப்பதை கண்டு மகிழ்கிறேன் !
இதயத்தில் எழுதிய உறவுகள்
என்றும் இறப்பதில்லை !

1 comment:
the last train! why does every journey in life begins n ends in a railway station?? ever thought abt it...its a penetrating poem..
Post a Comment